×

கொல்ல வந்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரை சேர்ந்தவர் தேவராஜ்(40), லாரி மெக்கானிக். இவரது மனைவி பானுமதி(34). ஒரு மகன், மகள் உள்ளனர். தேவராஜ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தேவராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பானுமதியிடம் தகராறு செய்துள்ளார். விடிய விடிய இருவருக்கும் வாக்குவாதம் நீடித்துள்ளது. நேற்று அதிகாலை திடீரென தேவராஜ் கருங்கல்லை எடுத்து பானுமதி தலையில் போட முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட பானுமதி கட்டையை எடுத்து தேவராஜ் தலையில் அடித்ததில் அவர் இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து பானுமதியை கைது செய்தனர்.

The post கொல்ல வந்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Valaja ,Ranipetti District ,Wallaja ,RC ,Motur ,Devaraj ,Panumati ,
× RELATED இந்த வார விசேஷங்கள்