×

புதுச்சேரி முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம்!!

புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம், வெங்கட்டாநகர் மற்றும் வில்லியனூர் உயர் மின் அழுத்தப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதுச்சேரி முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைசாவடி வரையிலும், அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என மின்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post புதுச்சேரி முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vengatanagar ,Villianur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை