×

குடிநீருக்கு தோண்டிய பள்ளத்தில் 5 சாமி சிலைகள் மீட்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கொல்லுமாங்குடி அருகே மாங்குடி தோப்புத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ்(50). விவசாய கூலி தொழிலாளி. இவர், தனது வீட்டு வாசலில் குழாய் பதிப்பதற்காக நேற்று பள்ளம் தோண்டியபோது 5 அடி ஆழத்தில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது. அதில் உலோகத்தாலான 110 செ.மீ. உயர பெருமாள் சிலை, 8 செ.மீ. உயர ஆண்டாள் சிலைகள் 2, மகாலட்சுமி சிலை 1, அரை அடி உயர கருடர் சிலை மற்றும் ஒரு சிறிய உலோக சிலை, மூடியுடன் கூடிய செம்பு, 5 ருத்ராட்ச கொட்டைகள் இருந்தன. தகவலறிந்து நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிலைகள் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

The post குடிநீருக்கு தோண்டிய பள்ளத்தில் 5 சாமி சிலைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sami ,Tiruvarur ,Sivaraj ,Mangudi Thoptuteru ,Nannilam Kollumangudi, Thiruvarur District ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...