×

டெல்லியில் உச்சகட்ட பதற்றம்; பிரதமர் வீட்டின் மேல் பறந்த மர்ம ட்ரோன்: போலீசார் தீவிர விசாரணை

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இல்லம் உள்ள டெல்லி பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், புகைப்படம் எடுக்கவோ, ட்ரோன்கள் பறக்கவோ அனுமதியில்லை. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது.

இதை குறித்து, பிரதமரின் இல்லத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர், உடனே டெல்லி காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். சம்ப இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அருகிலுள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் அது போன்ற பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டதில், பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post டெல்லியில் உச்சகட்ட பதற்றம்; பிரதமர் வீட்டின் மேல் பறந்த மர்ம ட்ரோன்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!