×

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

ஜிம்பாப்வே: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்ற நிலையில் ஜிம்பாப்வே வெளியேறியது. தகுதிச் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை இலங்கைஅணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஜிம்பாப்பே அணி களமிறங்கியது.

ஆரம்பம் முதலே தடுமாறிய ஜிம்பாப்பே அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்கையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்பே அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 56 ரன்களும், ராசா 31 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசி தீக்ஷனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், பதிராணா 2 விக்கெட்டுகளையும், ஷனாகா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 33.1 ஓவர்களில் இலக்கை எட்டி எளிமையாக வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக நிஸ்ஸங்கா 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

The post இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket ,India ,Zimbabwe ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...