×

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் உயிராக, போராட்டத்தின்போது வாளாக உள்ளது. மொழியின் பெயரில் வாரிசுகளுக்கு பெயர் வைக்கும் இனம் தமிழினம் மட்டுமே.

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது. தமிழ் எப்போதும் வாழவே வைக்கும். தமிழ் என்பது மொழியாக மட்டுமல்ல நமக்கு அமுதமாக உயிராக நம்மை வாழ வைக்கக் கூடிய மண்ணாக இருக்கிறது. தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும், மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடி. மொழி என்பது நமக்கு எழுத்தா இல்லாமல் ரத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

The post தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK ,G.K. stalin ,Chennai ,Mueller ,North America ,California ,B.C. G.K. Stalin ,
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...