×

பெண்ைண கட்டையால் தாக்கி 8 சவரன் நகைகள் கொள்ளை தண்டராம்பட்டு அருகே மர்ம நபர்கள் துணிகரம் வீட்டின் வெளியே படுத்து தூங்கிய

தண்டராம்பட்டு, ஜூலை 2: தண்டராம்பட்டு அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிய பெண்ணை கட்டையால் தாக்கி 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் எதிரே வசிப்பவர் சக்திவேல்(40). இவர் சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி(37). இவர்களுக்கு மகள் பிரியா, மகன் வெற்றிவேல் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைவாணி வீட்டின் வெளியே படுத்து தூங்கிகொண்டிருந்தார். மகள் மற்றும் மகன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் கலைவாணியின் தலைப்பகுதியில் கட்டையால் அடித்து கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயின், கால் காசு, தாலி உள்ளிட்ட 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கலைவாணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் உறங்கி கொண்டிருக்கும் மகன், மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால் வீட்டில் சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு வந்திருந்த கொள்ளையர்கள் ஓடிச்சென்று பைக்கை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் கலைவாணியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post பெண்ைண கட்டையால் தாக்கி 8 சவரன் நகைகள் கொள்ளை தண்டராம்பட்டு அருகே மர்ம நபர்கள் துணிகரம் வீட்டின் வெளியே படுத்து தூங்கிய appeared first on Dinakaran.

Tags : Thandarampatu ,Vadhakaram ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...