×

பெரம்பலூரில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு வலை

பெரம்பலூர்,ஜூலை2:பெரம்பலூரில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் -அரியலூர் சாலையில் உள்ள மின் நகரை சேர்ந்தவர் தர்மராஜ். 4ரோடு அருகே பழை ய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்தியா(23). நேற்று தர்மராஜ் கடைக்குச் சென் றபிறகு நித்தியா வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தண்ணீர் கேன் போட வந்திருப்பதா கக் கூறி கதவைத் தட்டியு ள்ளார். அப்போது வெளியே வந்த நித்தியா தங்க ளுக்கு தண்ணீர் கேன் வே ண்டாமெனக் கூறியுள்ளார்.

பின்னர் அந்த அடையாளம் தெரியாத அந்த வாலிபர் தனக்கு குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் எனக் கூறிக் கொண்டே வீட்டினுள் நுழை யமுற்பட்டு, வித்யாஅணிந் திருந்த செயினை அந்த வாலிபர் பறிக்கமுயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியா கூச்சலி ட்டதால் அருகில் இருந்த வர்கள் ஓடி வந்ததை அறி ந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நித்தியா அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post பெரம்பலூரில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Valibur ,E City ,Ariyalur Road ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...