×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் 3 பேர் கைது

கோவில்பட்டி, ஜூலை 2: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் காளிராஜ் (26). அதே ஊரைச் சேர்ந்த ஆண்டவன் மகன் பாண்டிசெல்வம் (23), லட்சுமணன் மகன் பால்ராஜ் (35). இவர்கள் 3 பேரும், 16 வயது சிறுமியை, செல்போன் வாங்கித்தருகிறேன், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கித்தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, தனித்தனியாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் வயிற்று வலியால் அவதிப்படவே, அவருடைய தாய் காரணம் கேட்டார். அதற்கு அவர் கழுகுமலை வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த 3 பேர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி காளிராஜ், பாண்டிசெல்வம், பால்ராஜ் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது ெசய்து கோவில்பட்டி கிளைச் ஜெயிலில் அடைத்தார். போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Kovilpatti ,Ramanathan ,Kaliraj ,Kalgakumalai ,Tuticorin district ,
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...