×

கென்யாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 51 பேர் பலி

நைரோபி,: மேற்கு கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 51 பேர் பரிதாபமாக பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் நைரோபியில் இருந்து வடமேற்கில் 125 மைல் தொலைவில் லண்டியானியின் ரிப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பகுதி விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த சந்தைக்குள் புகுந்தது.

அங்கு சைக்கிள், கார், இருசக்கர வாகனங்கள், 8 மினி பஸ்கள் மீதும், சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீதும் லாரி மோதியது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 51 பேர் பலியாகி விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை படுகாயமடைந்த 32 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கென்யாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 51 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kenya Nairobi ,western Kenya ,Kenya ,Dinakaran ,
× RELATED கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி