போபால்: மத்தியப்பிரதேசத்தில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் அரிவாள் செல் ரத்தசோகை நோய் 2047ம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கம் செயல்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 3.57 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அட்டைகளையும் பிரதமர் வழங்குகிறார். மத்திய பிரதேசத்தின் ஷதோல் மாவட்டத்தில் பழங்குடியினர் சமுதாயத்தினருடனும் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
The post ம.பி.யில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.