×

கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

 

கோத்தகிரி, ஜூலை 1: கோத்தகிரியில் தனியார் மரக்கடை அருகே உள்ள குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே தனியார் மரக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மரம் சார்ந்த வீட்டு கட்டுமான பொருட்கள் மற்றும் மரவகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மரக்கடையில் பணியாற்றி வரும் நபருக்கு அங்கு குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அருகே மரக்கடையில் பணியாற்றி வந்த நபர்கள் உடனே அங்கு சென்று பார்த்த போது வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருகில் உள்ள மரக்கடைக்கு தீ பரவாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும், கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான நகர் சாலையில் தீ விபத்து ஏறப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது மின்கசிவு மூலம் ஏற்பட்டதா? அல்லது அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Gothagiri Wooden ,Gothagiri ,Kothagiri ,Gothagiri Margadah ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்