×

அரசு பஸ் மோதி வியாபாரி பலி

 

திருப்பூர்,ஜூலை1: திருப்பூர், ராயபுரம் அடுத்துள்ள குமரப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம் (40). இவர் பனியன் குடோன் வைத்துள்ளார்.நேற்று முன் தினம் இரவு சினிமாவிற்கு சென்று அவருடைய பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரில் அரசு பஸ் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து அப்துல் சலீம் பைக் மண்ணில் சறுக்கி பஸ் மீது மோதி கிழே விழுந்தார். இதில் அப்துல் சலீமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அப்துல் சலீமை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் சலீம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post அரசு பஸ் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Abdul Salim ,Kumarappapuram ,Rayapuram, Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...