×

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூதாட்டி உயிரிழப்பு

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஆனந்தம். இவரது மனைவி பரிசுத்தம் (62). இவர் கடந்த மாதம் 23ம்தேதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் என நினைத்து தவறுதலாக மண்ணெண்ணெய்யை குடித்து விட்டார். இதனலல் உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

The post தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Arul Anandam ,Ponnapur West ,Thanjavur district ,
× RELATED போலீசார் மீது கல்வீச்சு: சிறுவன் உள்பட 5 பேர் கைது