×

வரதட்சணை கொடுமை இளநிலை உதவியாளர் பெற்றோர் மீது வழக்கு

விருதுநகர், ஜூலை 1: விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமை செய்ததாக அரசுப்பள்ளி இளநிலை உதவியாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே ஆமத்தூரை சேர்ந்தவர் பானுப்பிரியா(25). இவருக்கும் எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சீனுவிற்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்துள்ளது. 21 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் ஆன நாள் முதல் சீனுவின் தந்தை செல்லதுரை, தாய் மகாராணி இருவரும் சீர்வரிசை பொருட்கள் சரியில்லை என புகார் கூறி வந்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு, மன, உடல் ரீதியாக பானுப்பிரியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சீனு, செல்லதுரை, மகாராணி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமை இளநிலை உதவியாளர் பெற்றோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Dowry ,
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்