×

10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரவசங்களில் பங்களித்த செவிலியருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரவசங்களில் பங்களிப்பு செய்த நிலையில், பணி ஓய்வு பெறும் செவிலியர் கதீஜா பீவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி, தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வு பெறுகிறார்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பெருந்தொண்டுக்கும் அடையாளச் சின்னமாக இவரது பணி அமைந்திருக்கிறது. பத்தாயிரம் பிள்ளைப்பேற்றுக்குத் துணைபுரிந்து பல குடும்பங்களில் மகிழ்ச்சியை விதைத்த ‘செவிலித்தாய்’ கதீஜா பீவிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து, அவரது ஓய்வுக்காலம் நிறைவானதாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன்.

The post 10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரவசங்களில் பங்களித்த செவிலியருக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Khadija Bivi ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...