×

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் சாலையில் அலப்பறை செய்த ஆசாமி: வாணியம்பாடியில் அதிர்ச்சி

வாணியம்பாடி: தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில், போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பின்போது கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்திலும் கைது செய்கின்றனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் நேற்று ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தனது கையில் கள்ளச்சாராய பாக்கெட்டை தூக்கி வைத்தபடி நடுரோட்டில் அலப்பறை செய்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், மற்றும் பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் சிலர் இதை தங்களது செல்போனில் போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். நேற்று முதல் வைரலான இந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கள்ளச்சாராய பாக்கெட்டுடன் சாலையில் அலப்பறை செய்த ஆசாமி: வாணியம்பாடியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Asami ,Vanyambadi ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...