×

மணிப்பூர் சகோதர சகோதரிகளின் குரலுக்கு செவிசாய்ப்போம்: முதல்வர் டிவிட்

சென்னை: மணிப்பூர் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் அமைதியும் தேவை அதற்கு அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர்: மணிப்பூரில் உள்ள குடும்பங்களை நமது சொந்தங்களாகக் கருதி அவர்களது வாழ்க்கையில் அமைதியை மீட்டளிப்பது நமது கூட்டான கடமையாகும். நம்மிடையே உள்ள அரசியல் மாறுபாடுகளோ பிற தடைகளோ அவர்கள் வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது.

சகோதரர் ராகுல் காந்தி மணிப்பூர் மக்களைச் சந்திக்க விடாமல் தடுப்பது என்பது முன்னேற்றத்திற்கான பாதையை மறிப்பதன்றி வேறில்லை. மணிப்பூர் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் அமைதியும் தேவை அதற்கு அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்போம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

The post மணிப்பூர் சகோதர சகோதரிகளின் குரலுக்கு செவிசாய்ப்போம்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Chief Minister ,Dewitt ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...