×

விமானம் மூலமாக வருகிற ஆண்டு முதல் மதுரையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: புனித ஹஜ் பயணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து 18 லட்சத்து 45 ஆயிரத்து 45 நபர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 164 நபர்கள் சென்றனர். இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 421 நபர்கள் இந்திய ஹஜ் கமிட்டி சார்பிலும் 34,635 நபர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பிலும் செல்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,954 நபர்கள் புனித ஹஜ் பயணத்தை நிறைவு செய்து தமிழகம் விமானம் மூலம் ெடல்லிக்கு வர உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் விமானம் ஜூலை 15ம் தேதி வருகிறது. கொரோனாவிற்கு பிறகு 2023ல் நடைபெற்ற ஹஜ் பயணம் மட்டுமே முழுமையாக செல்ல முடிந்தது. மேலும் வருகின்ற 2024ல் ஹஜ் பயணத்துக்கு மதுரையில் இருந்தும் ஒரு சில விமானங்களை இயக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.

The post விமானம் மூலமாக வருகிற ஆண்டு முதல் மதுரையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Haj ,Indian Hajj Association ,Chennai ,President ,Abupakar ,Hajj ,Indian Haj Association ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை