×

கூலி தொழிலாளி மாயம்

 

குலசேகரம், ஜூன் 29: குலசேகரம் அருகே திருநந்திக்கரை முக்கால்வட்டம் சானல் கரையை சேர்ந்தவர் விஜயகுமார் (53). கூலி தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் விஜய் (26) என்ற மகன் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு திடீரென்று காணாமல் போய்விடுவார். போதை தெளிந்தவுடன் மறுநாளே வீட்டுக்கு வந்துவிடுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜய் பல இடங்களில் தனது தந்தையை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன விஜய குமாரை தேடி வருகின்றனர்.

The post கூலி தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Vijayakumar ,Tirunandikarai Mukalvattam ,Laborer ,Mayam ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...