×

புதிய உச்சம் தொட்டு சாதனை: 64 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேர வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 63,716 என்ற புதிய உச்சம் தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 18,908 புள்ளிகளை தொட்டது. பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், எஸ்பிஐ, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. பவர்கிரிட், எச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, எம் அண்ட் எம், பார்த்தி ஏர்டெல், மாருதி சுசூகி பங்குகளும் விலை உயர்ந்தது.

ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் 64 ஆயிரத்தை இன்னும் ஓரிரு நாளில் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. சென்செக்ஸ் உச்சம் தொட்டு வருவதால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post புதிய உச்சம் தொட்டு சாதனை: 64 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,New Apex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!