சென்னை: அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வெளி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
The post அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.