×

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்துக் கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்று கூறியுள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Ma. Subramanian ,Chennai ,Maoists ,Supremanian ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...