×

அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார்.. விளக்கம் கேட்டு நெல்லை திமுக எம்.பி-க்கு கட்சி தலைமை நோட்டீஸ்!

சென்னை : திருநெல்வேலி திமுக எம்.பி.ஞானதிரவியம், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள கடிதத்தில் , திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், திமுக வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், திமுகவிற்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகாா்கள் வந்துள்ளன.

அவரது இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயா் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த ஏழு நாள்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

The post அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார்.. விளக்கம் கேட்டு நெல்லை திமுக எம்.பி-க்கு கட்சி தலைமை நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirunelveli ,Thisagam ,M. GP ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...