×

எச்.எம்.எஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக பதவிஏற்பு

கோவை: கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்) மகாசபை கூட்டம் சிங்காநல்லூர் தியாகி என்ஜிஆர் மஹாலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார். இதில், கடந்த 18.05.2020 முதல் சட்ட விரோதமாக முடக்கி வைத்துள்ள என்.டி.சி ஆலைகளை திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையொட்டி, 2023-2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், சங்க தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் ஜி.மனோகரனுக்கு கூடுதல் பொறுப்பாக செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும், செயலாளர்களாக கே.கண்ணன், எம்.அப்புக்குட்டி, எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், துணை தலைவர்களாக சி.சண்முகம், பி.டி.மோகன்ராஜ், கே.கந்தசாமி, ஆர்.தங்கவேலு, ஆர்.ஏ.ஜேசுராஜ், உதவி செயலாளர்களாக வி.கே.தங்கராஜ், எஸ்.ஆர்.சண்முகம், சிறப்பு செயலாளர்களாக சி.மருதாசலம், பி.கோவிந்தராஜூலு, கே.பழனிசாமி, ஆர்.பத்மநாபன், எஸ்.ஸ்ரீராம், தென்றல் நாகராஜ், என்.வி.செல்வராஜ், என்.நாகராஜ், ஏ.ராஜன், எம்.பாலகுருசாமி, உடுமலை ஜி.சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, நிர்வாக குழு உறுப்பினர்களாக கே.முரளிதரன், வி.ரமணகுமார், எஸ்.லோகநாதன், டி.ராஜ்குமார், எஸ்.ஸ்ரீராம், ஜி.ராமதாஸ், வி.ராஜ், எம்.கணேசன், எம்.ரவி, ஆர்.கோபால், ஜி.துரைராதாகிருஷ்ணன், ஜி.ேஜாதிமணி, வி.கோவிந்தராஜ், எஸ்.கருப்புசாமி, எம்.கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

The post எச்.எம்.எஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக பதவிஏற்பு appeared first on Dinakaran.

Tags : DS Rajamani ,HMS ,Coimbatore ,Coimbatore District Panchalay Labor Union ,Mahasabha ,Singhanallur Tyagi NGR Mahal.… ,Dinakaran ,
× RELATED கார் திருடியவர் கைது