×

சர்க்கஸ் செல்ல பணம் கொடுக்காததால் கோபத்துடன் தலைமறைவான சிறுவன் திருச்சி ஜங்சனில் மீட்பு சைல்ட் ஹெல்ப் லைன் போலீசார் நடவடிக்கை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகன் முத்துக்கருப்பன் (13). இவர் குணமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாலை இவரது தாத்தா லூர்து சாமியிடம் விக்கிரமங்கலம் சென்று சர்க்கஸ் பார்க்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு பணம் கொடுக்காததால் கோவம் அடைந்த முத்துக்கருப்பன் அன்று மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்து முத்துக்கருப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் 25ம் தேதி மாலை திருச்சி ரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்தவரை சைல்டு ஹெல்ப் லைன் போலீசார் மீட்டனர். பின்பு விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்து பின்பு முத்துக்கருப்பனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் திருச்சி சென்று முத்துக்கருப்பனை அழைத்து வந்தனர். சிறுவனை மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். உடனே சிறுவனை மீட்டு ஒப்படைத்த காவல் துறையினருக்கு பலரும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

The post சர்க்கஸ் செல்ல பணம் கொடுக்காததால் கோபத்துடன் தலைமறைவான சிறுவன் திருச்சி ஜங்சனில் மீட்பு சைல்ட் ஹெல்ப் லைன் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Child Helpline ,Trichy Junction ,Bhalur ,Velankanni ,Gunamangalam ,Vikramangalam ,Ariyalur district ,Muthukaruppan ,
× RELATED ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்