×

திருவாரூர் திருமக்கோட்டை அருகே மேலநத்தத்தில் ரூ.35 லட்சத்தில் கலைஞர் நூற்றாண்டு சமுதாய கூடம்

மன்னார்குடி: திருமக்கோட்டை அடுத்த மேல நத்தத்தில் ரூ 35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு சமுதாய கூடத்தை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்த மேல நத்தம் ஊராட்சியில் மன்னார்குடி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட் டில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிதாக கட்டப் பட்ட சமுதாயகூடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச் சர் டிஆர்பி ராஜா தலைமை வகித்து கலைஞர் நூற்றாண்டு சமுதாய கூடத் தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசுகையில், வசதி படைத்த வர்கள் நகரங்களில் உள்ள திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நட த்திக் கொள்கின்றனர். ஆனால், ஏழை, எளிய கிராம மக்கள் வீட்டின் அருகில், தெருவில் பந்தல் அமைத்து சுப நிகழ்ச்சிகளை நடத்து கின்றனர். சாதாரண மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு இதுபோன்ற சமுதாயக் கூடங்களை கட்டி வருகிறது.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடத்தில், மேலநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர்கள் தேவதாஸ், பால ஞானி, முத்து வேல், திமுக தலைமை செயற்கு உறுப்பினர் ஞானசேகரன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன் னதாக ஊராட்சி செயலாளர் பாலு வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா நன்றி கூறினார்.

The post திருவாரூர் திருமக்கோட்டை அருகே மேலநத்தத்தில் ரூ.35 லட்சத்தில் கலைஞர் நூற்றாண்டு சமுதாய கூடம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Community Hall ,Melanatha ,Tiruvarur Thirumakottai ,Mannargudi ,Mela Natta ,Tirumakottai ,Thirumakottai ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED வெள்ளியூர் ஊராட்சியில் கலைஞர்...