×

பொதுமக்கள் கோரிக்கை தார்சாலையை சீரமைக்க கோரிக்கை புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கோயில்களில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

ஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கொப்பாபட்டி அம்மன் பஞ்ச மஹா கணபதி, கருப்பண்ணை சுவாமி, ஆஞ்சநேயர் சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கொப்பாபட்டி அம்மன் பஞ்சமஹா கணபதி கருப்பண்ணை சுவாமி ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் கடந்த 22ம் தேதி முதல் பல்வேறு வகையான ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் சிவாசாரியார்கள் ஈடுபட்டு வந்த நிலையில் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு மூன்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.

பின்னர் நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக சென்று பின்னர் கோயில் ராஜகோபர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் அவர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. மேலும் சிவாச்சாரியார்கள் தீபாதாரணை காண்பிக்க ஏராளமான சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

The post பொதுமக்கள் கோரிக்கை தார்சாலையை சீரமைக்க கோரிக்கை புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கோயில்களில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Alangudi ,Koppapatti ,Amman Pancha Maha ,Ganapathi ,Karuppannai Swami ,Anjaneyar ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!