×

பெரம்பலூர் சிவன்கோயிலில் மாணிக்கவாசகருக்கு குருபூஜைவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரத்தில் து றையூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நாயன் மார்கள் மண்டபத்தில் எழுந் தருளி அருள்பாளித்து வரும் மாணிக்கவாசக ருக்கு குருபூஜைவிழா நடை பெற்றது. இதனையொட்டி காலை 10:30மணியளவில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், வாச னை திரவியங்கள், பழங்க ளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 12 மணியளவில் மங்கள வாத் தியம் முழங்க மகா தீபாரா தனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்ப ட்டது. விழாவில் சிவனடி யார்கள், வார வழிபாட்டு குழுவினர், தின வழிபாடு குழுவினர் ராஜமாணிக்கம், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். . முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கீத்துக்க டை குமார், பூக்கடை சரவ ணன் ,பெ ரம்பலூர், எளம்பலூர், அர ணாரை, துறைமங்கலம், விளாமுத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச்சேர்ந்த திரளா ன பக்தர்கள் குரு பூ ஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

The post பெரம்பலூர் சிவன்கோயிலில் மாணிக்கவாசகருக்கு குருபூஜைவிழா appeared first on Dinakaran.

Tags : Gurupuja festival ,Manikkavasagar ,Perambalur Shiva Temple ,Perambalur ,Akilandeshwari Sametha Brahmapureeswarar Temple ,Du Raiyur Road ,Perambalur City ,Nayan Maral Mandapam ,Guru Puja Festival for Manikkavasagar ,
× RELATED அரிமளம் அருகே காமாட்சி அம்மன்...