×

நேபாள கோயிலில் 10 கிலோ தங்கம் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் உள்ள சாமியின் ஆபரணங்கள் மொத்தம் 100 கிலோ எடையில் செய்யப்பட்டதாகும். அதில் இருந்த 10 கிலோ தங்கம் மாயமானது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து நேபாள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறை மாயமான தங்கம் குறித்து நேற்று கோயிலில் வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கோயில் நடை பூட்டப்பட்டது.

The post நேபாள கோயிலில் 10 கிலோ தங்கம் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,KATHMANDU ,Sami ,Pashupatinath temple ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...