×

திருச்சி அருகே கோர விபத்து அரசு பஸ் மீது கார் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி: 43 பேர் காயம்

துவரங்குறிச்சி: திருச்சி அருகே நேற்று அரசு பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் பலியாயினர். பயணிகள் 43 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கே.உடையாபட்டியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (48), ஐயப்பன் (20), மணிகண்டன்(35), நாகரத்தினம் (36) மற்றும் பில்லூரை சேர்ந்த மெக்கானிக் தீனதயாளன் (20) ஆகிய 5 பேரும் நேற்று மாலை 5.30 மணியளவில் காரில் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை தீனதயாளன் ஓட்டினார்.திருச்சி மாவட்டம் வையம்பட்டி கொத்தனூர் சென்ற போது காரின் முன்பக்க டயர் வெடித்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர்திசையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. பஸ்சும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 5 ேபரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பஸ் டிரைவர் ராஜேந்திரன், கண்டக்டர் பிரகாஷ் உள்பட 43 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

* தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post திருச்சி அருகே கோர விபத்து அரசு பஸ் மீது கார் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி: 43 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Duwarankurichi ,Kora accident ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...