நெல்லை,ஜூன் 25: வீரவநல்லூர் கோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர் காந்த் (36). இவர் கல்லிடைக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து காந்தை தேடி கண்டு பிடிக்க நெல்லை மகிளா நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் அவரைத்தேடிவந்த நிலையில் நேற்று காந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடிவாரன்டை நிறைவேற்றினர்.
The post வழக்கு விசாரணைக்கு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.