×

வழக்கு விசாரணைக்கு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது

நெல்லை,ஜூன் 25: வீரவநல்லூர் கோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர் காந்த் (36). இவர் கல்லிடைக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து காந்தை தேடி கண்டு பிடிக்க நெல்லை மகிளா நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் அவரைத்தேடிவந்த நிலையில் நேற்று காந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடிவாரன்டை நிறைவேற்றினர்.

The post வழக்கு விசாரணைக்கு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nolla ,Ganth ,Veeravannallur Fort Vasal Street ,Kallidyakerichi ,Dinakaran ,
× RELATED காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி...