×

விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையை அதிகாரி ஆய்வு

அரூர், ஜூன் 25: கம்பைநல்லூரில் இருந்து இருமத்தூர் செல்லும் சாலை குறுகலாக இருந்தது. சுமார் 5 கிமீ தொலைவுள்ள இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பஸ்கள் என அதிகப்படியான வாகனங்கள் சென்று வந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டது. இயைதடுத்து இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கம்பைநல்லூர்- இருமத்தூர் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சாலையின் அளவு, கனரக வாகனத்தை சாலையில் இயக்கி, தரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்ேபாது, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aroor ,Kambainallur ,Irumathur ,Dinakaran ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை