- பாபநாசம் மாவட்ட சட்டப்பணிகள் குழு
- தஞ்சாவூர்
- கபிஸ்தலம் ஊராட்சி காங்கேயன்பேட்டை
- அக்கரைப்பூண்டி
- பாபநாசம் மாவட்ட சட்டப்பணிகள் குழு
- பாபநாசம் மாவட்ட சட்டப்பணிகள் குழு
- தின மலர்
தஞ்சாவூர், ஜூன் 25: கபிஸ்தலம் ஊராட்சி காங்கேயன்பேட்டை மற்றும் அக்கரைப்பூண்டி பகுதிகளில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் வக்கீல் செந்தில்வேலன், சட்ட தன்னார்வலர் ராஜேந்திரன் ஆகியோர் காங்கேயன்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட் டத்தின் கீழ் பணியாற்றுபவர்களிடம் பேசுகையில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சட்டப்படி தீர்வு காண தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 181 ஆகும். சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனை பெற மாவட்டம் மற்றும் வட்டங்களில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என்றனர்.
The post பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.