திருமலை : ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது மேடை சரிந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் நுஜிவீடு அடுத்த பட்டுலவாரி கூடத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் எதிர்கால உத்திரவாதம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் உள்துறை அமைச்சர் நிம்மகாயல சின்னராஜப்பா கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. அதிகவேகமாக வீசிய காற்றால் மேடை சரிந்து விழுந்தது. இதில் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் எம்.பி. மாகந்தி பாபு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காயம் அடைந்தனர். முன்னாள் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
The post தெலுங்குதேசம் பொதுக்கூட்ட மேடை சரிந்து 10 பேர் காயம் appeared first on Dinakaran.