×

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகள் 9 பேருக்கு விருது

சென்னை : சென்னையில் நடந்த விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகள் 9 பேருக்கு விருது வழங்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்திலும் ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக் நிஜாம் முகைதீன் அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தீன் பொருளாளர் அமீர் ஹம்சா செயலாளர்கள் ரத்தினம் ஏ.கே.கரீம் அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் நெல்லை முபாரக் விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது திமுக தலைமை கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தந்தை பெரியார் விருது- திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் அம்பேத்கர் விருது- தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் காமராஜர் விருது- பேராசிரியர் லெ.ஜவஹர் நேசன் பழனிபாபா விருது- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கவிக்கோ விருது- எழுத்தாளர் ஜே.எம்.சாலி நம்மாழ்வார் விருது- காட்டுயிர் ஆர்வலர் முகமது அலி அன்னை தெரசா விருது- சமூக சேவகர் அலி பாஷா சயீத் சாஹிப் விருது- ஆ.சே.மு.ஷேக் மீரானுக்கு வழங்கப்பட்டன.

The post எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகள் 9 பேருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Chennai ,STPI… ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்