×

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படை முன்னேறுவதாக தகவல்..!!

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படை முன்னேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என ரஷ்ய ராணுவத்திற்கு வாக்னர் படை அறிவுறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போர் வெடித்துள்ள ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிறையிலும் கலவரம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்னர் படை முன்னேறுவதை தடுக்க தலைநகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள பாலங்களை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி அழித்தது. மாஸ்கோ செல்லும் ஓர்னஸ் என்ற இடத்தில் ஆயுதக்குழு கைப்பற்றிய எண்ணெய் கிடங்கு மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு வீசியது. குண்டுவீச்சு சத்தம் கேட்டு ரோஸ்டோவ் நகர மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

The post ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படை முன்னேறுவதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Wagner ,Moscow ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...