×

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அலுவலகத்தை கைப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்னர் ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சியால் மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட்டுத் தள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சி குறித்து நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. சுய நலனுக்காக வாக்னர் ஆயுதக் குழு தலைவர், நாட்டுக்காக துரோகம் செய்துவிட்டதாக அதிபர் புதின் குற்றச்சாட்டு. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்யாவில் தெற்கு ராணுவத் தலைமையகத்தை கைப்பற்றியதால் பதற்றம். வாக்னர் ஆயுதக் குழுவை தீவிரவாத அமைப்பு என அறிவித்தார்.

The post ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தேச துரோகிகள்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Buddin ,Moscow ,President ,Russia ,Buddha ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...