×

புற்று நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

 

ஈரோடு, ஜூன் 24: அந்தியூரை அடுத்துள்ள பட்லூர் கிராமம், மாக்கலூரைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்(46). இவரது மகன் தீபன்(24).புற்று நோய் பாதிப்பால் இவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 20ம் தேதி அதிகாலை திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்த தீபனை அவரது குடும்பத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவச் சோதனையில், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தீபன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.இதையடுத்து, தீபனை உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபன் சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து, தீபனின் தந்தை மாதேஸ்வரன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புற்று நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Matheswaran ,Makalur, ,Patlur ,Andhiyur ,Deepan ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா