×

விவசாயிகள் கவலை பொன்னமராவதி அரசு பள்ளியில் வளர்இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு மேனிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வளர்இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு மருத்துவர்கள் சுகன்யா மற்றும் லெட்சுமிப்பிரியா ஆகியோர்கள் தலைமையில் உயரம் எடை எடுத்தல் கண் பரிசோதனை, பல் மற்றும் தோல் பரிசோதனை நடத்தப்பட்டது. 230 மாணவ மாணவிகளுக்கு ரத்த பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டது. மேலும் காசநோய் தொழுநோய் குறித்து அதற்கான வட்டார அலுவலர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டனர். மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் முகாமில் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன் பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

The post விவசாயிகள் கவலை பொன்னமராவதி அரசு பள்ளியில் வளர்இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Government School ,Ponnamaravati ,Tamil Nadu Government Medical People's Welfare Department ,Melaichivapuri Government Menilaipalli ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...