×

மதுரையில் ரைஸ்மில்லில் பதுக்கிய 6,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது; ஒருவருக்கு வலை

 

மதுரை, ஜூன் 24: மதுரை வண்டியூரில் 6,200 கிலோ ரேஷன் அரிசியை ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஎஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார் தலைமையில் நேற்று மதுரை வண்டியூர் பகுதியிலுள்ள ஒரு ரைஸ் மில்லில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 6,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த செல்வம், கணேசன், சேது பாண்டி ஆகியோரை கைது செய்து, அதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கட்டிட உரிமையாளர் செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

The post மதுரையில் ரைஸ்மில்லில் பதுக்கிய 6,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது; ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Vandiyur ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...