×

கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

 

மதுரை, ஜூன் 24: மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் மதி (எ) மதியழகன் (48). இவரை மதுரை செல்லூர் சுரங்கப்பாதை அருகே 22 கிலோ உலர் கஞ்சாவுடன் மதுரை போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கடந்த 2014ல் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதன்மை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மதியழகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

The post கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madhi (A) Mathiyalagan ,Sammatipuram, Madurai ,Madurai Sellur tunnel ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி