×

நெல்லியாளம் நகராட்சி ஆணையாளருக்கு புகார்

 

பந்தலூர்,ஜூன்24: பந்தலூர் பழைய தியேட்டர் அருகில் வசிப்பவர் தர்மலிங்கம். கூலித் தொழிலாளியான இவர் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கூவமூலா சாலை, பழைய தியேட்டர் அருகே எனது வீடு அமைந்துள்ளது. அருகாமையில் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் வெளியாகும் கழிவுநீர் எனது வீட்டின் அருகே செல்வதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே தாங்கள் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

The post நெல்லியாளம் நகராட்சி ஆணையாளருக்கு புகார் appeared first on Dinakaran.

Tags : Nellialam ,Municipal Commissioner ,Pandalur ,Dharmalingam ,Dinakaran ,
× RELATED நெல்லியாளம் நகராட்சி அலுவலகம்...