×

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

 

கீழக்கரை, ஜூன் 24: கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கீழக்கரை நகராட்சி சேர்மன் ஷெஹானாஸ் ஆபிதா துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் ஜாக்குலின் லதா பெஸ்ட்ஸ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், மரக்கன்று நட்டு வைத்தார். தூய்மை விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல் குறித்து நிஷா பவுண்டேஷன் நிர்வாகி அபுபக்கர் சித்திக் உரை ஆற்றினார். ஹமீதியா தொடக்கப்பள்ளியில் நிறைவடைந்த பேரணியில் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகிலா பானு ஏற்பாடு செய்தார்.

The post சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : awareness ,Geezakarai ,Keezakarai Hamidiya Girls High School ,National Green Force ,Environmental Awareness Rally ,Dinakaran ,
× RELATED அரியலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி