×

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்களுடன், பெற்றோர் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், அங்கன்வாடி மையம், பள்ளி மற்றும் கோயில் ஆகியவை உள்ளன. அதான் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள், மது பாட்டில்களை வாங்கி, அங்கேயே குடித்துவிட்டு, குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளிடம் தினந்தோறும் தகராறு செய்து வருகின்றனர்.

இதனால், ஆரம்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பள்ளி செல்லும் மாணவ – மாணவிகளுடன் டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் உதவி காவல் ஆணையர் ரவி தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, உதவி காவல் ஆணையர் ரவி, ஒரு வாரத்தில் கடையை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக வாக்குறுதி அளித்தார். இதனால், பள்ளி மாணவர்களுடன், பெற்றோர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்களுடன், பெற்றோர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Sriperumbudur ,Padappa ,Tambaram ,Anganwadi center ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...