×

மாநகர ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏசி பேருந்தகள் இயக்கப்பட்டன.

அந்தசமயங்களில் மாநகர ஏசி பேருந்துகளில் போதிய பராமரிப்பு மற்றும் வருவாய் கிடைக்காததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் மாமல்லபுரத்துக்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள், மாநகர ஏசி பேருந்துகள் இயக்கப்படாததால் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் மாநகர ஏசி பேருந்துகளில் செல்ல விரும்பும் பயணிகளும் வேதனை அடைந்தனர். எனவே, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மீண்டும் மாநகர ஏசி பஸ்களை இயக்க போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

The post மாநகர ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu ,Pallava ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...