×

சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்து தப்பியோடிய கொள்ளையன்..!!

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்து கொள்ளையன் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருமலை பகுதியை சேர்ந்த (43) வயதான வளர்மதி என்ற பெண் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் அசிஸ்டன் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் பணி முடித்து சென்னை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திருவள்ளூர் நோக்கி செல்லக்கூடிய மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நின்று விட்டு புறப்பட தயாரானது. புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் நின்றிருந்த நபர் ஒருவர் அவர் கழுத்திலிருந்த 10 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு ரயிலிலிருந்து குதித்து தப்பியோடினார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் அவரை பிடிக்க முறைப்பட்ட போது அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பாக பேசின்பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி 2 தனிப்படைகள் அமைத்து அந்த குற்றவாளியை தேடி வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்து தப்பியோடிய கொள்ளையன்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Basinbridge railway station ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…