சென்னை: தமிழகத்தில் ஆமை கூடு கட்டும் பருவத்திற்கு அதிகாரப்பூர்வமாக விடைபெறும் நிலையில் கடந்த 7 ஆண்டுக்களை விட அதிகளவிலான ஆமைக்குஞ்சுகள் இந்தாண்டு கடலில் விடப்பட்டுள்ளன என்று சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு 35 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என்று வனம் மற்றும் சுற்றுசூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறியுள்ளார். தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எங்கள் களப் பணியாளர்கள் அளப்பரிய பங்களிப்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்களை விட அதிகளவிலான ஆமைக்குஞ்சுகள் இந்தாண்டு கடலில் விடப்பட்டுள்ளன: சுப்ரியா சாகு டிவிட் appeared first on Dinakaran.