×

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு.. 1600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!!

போஸ்டன்: டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று காணாமல் போன 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர்.

ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று காளியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் டைட்டானிக் கப்பலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அது காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் தானா என வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

The post டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு.. 1600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Boston ,U.S. Coast Guard ,
× RELATED அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை: சக மாணவர்கள் வெறிச்செயல்