×

அரசு தொடக்க பள்ளியில் முதல் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ப்பு

 

தொண்டி, ஜூன் 23: தொண்டி அருகே நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் நேற்று இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பில் நூறு மாணவர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் சுமார் 500 மாணவர்கள் படிக்கின்றனர். மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி இதுவாகும். ஆனால் இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. அதனால் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செய்யது யூசுப் கூறியது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும் என்றார்.

The post அரசு தொடக்க பள்ளியில் முதல் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai Government Primary School ,Thondi.… ,Dinakaran ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை